புதுடெல்லி: இந்திய போட்டி ஆணையத்தின் தலைவராக இருந்த அசோக் குமார் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் பதவி விலகினார். அதன் பின்னர் முழுநேர தலைவர் இன்றி ஆணையம் செயல்பட்டு வந்தது. ஆணைய உறுப்பினர் சங்கீதா வர்மா பொறுப்பு தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் சிசிஐ புதிய தலைவராக ரவ்னீத் கவுரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர் ஐந்து ஆண்டுகள் வரை ஆணையத்தின் தலைவராக இருப்பார். சிசிஐ தலைவருக்கு மாதந்தோறும் ரூ.4 லட்சத்து 50ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
The post சிசிஐ தலைவராக ரவ்னீத் கவுர் நியமனம் appeared first on Dinakaran.